ஞாயிறு, 29 ஜூன், 2014

வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு துவங்கியது

துபாய்; வளைகுடா நாடுகளில்  இன்று (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியது. சவுதி அரேபியா,ஐக்கிய அரபு அமீரகம், குவைத், , கத்தார், எகிப்து, ஜோர்டான்
உள்ளிட்ட நாடுகளிலும்  புதன்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது. இதனையொட்டி  சிறப்பு இரவுத் தொழுகை பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது. நேற்றுடன் இஸ்லாமிய மாதம்  ஷாபான் 30 நாட்கள் பூர்த்தியானதை தொடர்ந்து நேற்று மாலை முதல்  முதல் பிறை கனக்கிடப்படுள்ளது

நோன்பு திறப்பதற்காக பல்வேறு பள்ளிவாசல்களிலும் பழச்சாறு, பேரிச்சம்பழம், பிரியாணி உள்ளிட்டவற்றுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் முகாம்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 

மேலும் தெற்காசிய நாடுகளான  சிங்கப்பூர் இந்தோனேசியா  உள்ளிட்ட நாடுகளிலும் இன்று (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான்  நோன்பு துவங்கியது. இதனையொட்டி நேற்று  மாலை  அனைத்து பள்ளிவாசல்களிலும் வழக்கமான இரவு தொழுகைக்கு பிறகு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக