வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சிதம்பரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கும் பணி தொடக்கம்!

சிதம்பரம்  தொகுதி வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 512 வாக்குச்சாவடிகள் உள்ளதுய சிதம்பரம் நகரில் மொத்தம் 47,075 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 33 வார்டுகள். மொத்தம்-23  வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் வாக்காளர்களுக்கு
புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பூத்சிலிப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த பூத்சிலிப் வருகிற ஏப்.19-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 19-ம் தேதிக்கு மேல் பூத்சிலிப் பெறாதவர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக