சனி, 8 ஜூன், 2013

சென்னை- அபுதாபி விமானத்தில் கோளாறு 147 பேர் தப்பினர்

சென்னை:சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் 140 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரத்தை பொறியாளர்கள் சரிபார்த்தனர். அப்போது விமானத்தில் பெரிய அளவில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பொறியாளர் குழுவினர் விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 5 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. தகுந்த நேரத்தில் கோளாறை கண்டுபிடித்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக