திங்கள், 14 ஜூலை, 2014

உலகக்கோப்பை கால்பந்து; கோப்பையை வென்றது ஜெர்மனி

ரியோ டி ஜெனிரோ:உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் அர்ஜெர்டினா, ஜெர்மனி அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது, பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது. எனினும், 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா - ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக