போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதிலும், இஸ்ரேல் காசா மீது விமானத்திலிருந்து குண்டுகளையும் பீரங்கி குண்டுகளையும் வீசிவருகிறது.
காசா பக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சும் தொடர்ந்துவருகிறது.
ஹமாஸ் இயக்கிய ஆளில்லா விமானம் ஒன்று அஷ்டொட் நகரத்தின் மீது பறக்கும்போது அதனை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.
லெபனான்-சிரியா போன்ற இடங்களிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வந்து விழுந்துள்ளன. இஸ்ரேலும் அவ்விடங்களை நோக்கி பதிலுக்கு பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த ஒருவார கால வன்முறையில் தமது தரப்பில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் சாதாரணப் பொதுமக்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த பல கட்டிடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் இருக்கவில்லை. அங்கு வசித்துவந்த சாதாரணமக்கள் இஸ்ரேலின் கொடிய தாக்குதலில் பலியானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு எதிராக உலகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி,மும்பை, ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக
கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக