திங்கள், 15 ஜூன், 2015

பவர் பிளான்ட்டில் மேலும் ஒரு உயிர் பலி:கண்டு கொள்ளாத தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம்

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை ரிக்குப்பம்  பகுதியில்  சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனி அமைக்கும் பணி நடந்து வருகிறது  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை டெல்லி தேசிய  பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014ல்  தடை விதித்தது ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனிக்கு அளித்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தும்  இந்த உத்தரவுக்கு எதிராக அந்நிறுவனம் கட்டுமானப் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கிறது  இதுவரை பத்திற்கும்
மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளி  எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் 

நேற்று (14-06-15) நடந்த விபத்தில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் விழுப்புரம் மாவட்டம், நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர்  பெயர் அருண்குமார் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அவர் அனல் மின் நிலையத்தில் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் இவ் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படி தொடர் உயிர் பலி தொடர்ந்து கொண்டு உள்ளதை  எதிர்த்து சில அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் இயக்கங்களும் போரட்டங்கள் நடத்தியும்  நேரடி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கண்டு கொள்ளாத  மத்திய மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு உள்ளது..


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக