:பிளாஸ்டிக் அட்டையில் ஆதார் அடையாள அட்டையைப் பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் செயல்படும். பொதுமக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.
ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்புகைச்சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டைப் பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கெனவே, ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற விரும்பினால், ஆதார் எண்ணைத் தெரிவித்து ரூ.30 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 1,87,556 பேருக்கு ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு அடையாள அட்டைகள் மத்திய அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது வரை 13,433 பேர் புகைப்படம் எடுத்துக் கொள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக