வெள்ளி, 27 மார்ச், 2015

நாளை (மார்ச் 28) முழு அடைப்பு போராட்டம்: வியாபாரிகள் கூட்டமைப்பு ஆதரவு


கடலூர்:தமிழகத்தில் நாளை (மார்ச் 28-ம் தேதி) நடைபெறும் அனைத்து விவசாயிகளின் முழு கடை அடைப்பு போராட்டடத்திற்கு கடலூர் மாவட்ட உணவு பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:காவிரியின் குறுக்கே மேக தாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்து நாளை 28ம் தேதி தமிழக விவசாயிகள்
சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்று வியாபாரிகள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.என்றார்
மின்சாரம், மருத்துவம், அவசர ஊர்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் நடக்கும்.
முழு கடை அடைப்புக்கு திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்கள், லாரி அதிபர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக