செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பரங்கிப்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 27 பயணிகள் காயம்

பரங்கிப்பேட்டை:தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பஸ் பரங்கிப்பேட்டை அடுத்த சி.முட்லூர் அருகே மண்டபம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போ திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அருகில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த தஞ்சையை சேர்ந்த விஜயகுமார், குருபிரசாத், சுப்புராஜ், ராகுல்ராஜ், செண்பகவள்ளி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த வினோதா, ராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த
ஜான்சி, மகாதேவன், தமிழ்செல்வி உள்பட 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பள்ளத்தில் விழுந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. பஸ்சில் வந்த மற்ற பயணிகள் வேறு பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

1 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு