திங்கள், 22 ஜூலை, 2013

சிங்கப்பூரில் PISWA சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி..!

சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கத்தின் (PISWA)சார்பில் நேற்று மாலை சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசல் கூட்ட அரங்கில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, ஹெச்.ஹமீது கவுஸ் இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ்.முஸ்தபா கமால் அனைவர்களையும் வரவேற்றார். 
 
பென்கூலன் பள்ளியின் இமாம் அப்துல் கையூம் பாகவி தனது உரையில், “சுயநலத்தை அடியோடு வேரறுத்து, உளத்தூய்மையுடன்  செய்யப்படும் பணிகள் மட்டுமே வெற்றி பெறும், சமுதாய நலன், ஊர் நலனுக்காக இதுப்போன்ற கட்டமைப்புகள் அவசியம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “ ஒருங்கிணைப்பு என்பது உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது அல்ல, உள்ளங்களை ஒருங்கிணைப்பதே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
 
பின்னர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி- மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இரண்டாம் அமர்வில் அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஜியாவுதீன் அஹமது, கடந்த 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வமைப்பின் கல்வி, மருத்துவம், குர்ஆன் மக்தப் உள்ளிட்ட செயல்பாடுகளை சுருக்கமாக பட்டியலிட்டார். 
 
இறுதியில் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் கரீம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஹெச்.தாரிக் ஹுஸைன் தலைமையில், பொருளாளர் எம்.ஜி.கமாலுத்தீன், மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 70 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.











நன்றி:MYPNO.COM
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக