செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பரங்கிபேட்டை அருகே வக்கீல் குமாஸ்தா கொன்று புதைப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் சம்மந்தம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே உள்ள காட்டு பகுதியில் தரையில் ரத்த துளிகள் சிதறி கிடந்தன. இதை இன்று காலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பிணம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள்.
இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு துரை
தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் தாசில்தார் விஜயா தலைமையில் அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு வாலிபரை கொன்று பிணத்தை புதைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அந்த வாலிபர் பரங்கிப்பேட்டை அகரத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் மகன் ராஜா (37) என்று தெரிந்தது. அவர் தலையில் காயங்கள் காணப்பட்டன.

அவரை கடத்தி சென்று அடித்து கொன்று பிணத்தை புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜாவின் தம்பி கண்ணன் அங்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை அடையாளம் காட்டினார். இந்த கொலைக்கும் சின்ன கொ

நேற்று காலையில் வீட்டிலிருந்து சென்ற தனது அண்ணனை படுபாவிகள் கொன்று விட்டார்கள் என்று கண்ணீர் சிந்தியபடி கூறினார். ராஜாவை கொன்ற கொலையாளிகள் பிணத்தை புதைக்க 6 இடங்களில் குழி தோண்டி உள்ளனர். 5 இடங்களில் குழி தோண்டி மூடி விட்டு 6-வது இடத்தில் உள்ள குழியில் பிணத்தை புதைத்துள்ளனர்.

போலீசாரை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு கொலையாளிகள் செயல்பட்டுள்ளனர். ராஜா எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொன்ற கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜா ஒரு வக்கீலிடம் கடந்த 15 ஆண்டுகளாக குமாஸ்தாவாக இருந்தார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

வள்ளி என்ற மனைவி உள்ளார். ராஜ்குமார் என்ற மகனும், ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். மற்றொரு மகள் ராஜஸ்ரீ உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்து விட்டார்.
மட்டி கொல்லை பகுதியை சேர்ந்த ஒரு பெண் சாராய வியாபாரிக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக